குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூன் 6: குமரி மாவட்டத்தில் கனமழை ஓய்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. பாலமோர், பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை வரை மழை பெய்திருந்தது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 9.4 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.17 அடியாகும். அணைக்கு 434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்