குமரியில் இளம்பெண்ணுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகை பறித்த வாலிபர் சிறையில் அடைப்பு: செல்போன் ஆய்வு

நாகர்கோவில்: குமரியில் இளம்பெண்ணுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம், நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குமரி மாவட்டம் நட்டாலம் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவருடன் பழகி வந்தார். இதை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை ஜாண் கென்னடி ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயந்து போன இளம்பெண்ணும், தனது வீட்டுக்கு தெரியாமல் ரூ.1.50 லட்சம் வரை கொடுத்துள்ளார். மேலும் 2 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஜாண் கென்னடி பணம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பணம் இல்லை என்று கூறி, போன் நம்பரை இளம்பெண் பிளாக் செய்தார். தனது போன் நம்பரையும் அந்த பெண் மாற்றியுள்ளார். புதிதாக மாற்றிய போன் நம்பரை ஜான் கென்னடி எப்படியோ தெரிந்து கொண்டு மறுபடியும் பணம் கேட்டு மிரட்டியதாக் தெரிகிறது. பணம் தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை இன்டர்நெட்டில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பியிடம் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம்  போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்கென்னடி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜான்கென்னடியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வீடியோவை வேறு யாருக்காவது அனுப்பி உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது….

Related posts

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை