குமரன்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

குலசேகரம்,ஆக.9: திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமரன்குடி, ஏற்றக்கோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குமரன்குடி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதனை திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பத்மநாபபுரம் கோட்டாட்சியர் டாக்டர் தமிழரசி, திருவட்டார் தாசில்தார் புரந்தரதாஸ், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஏற்றக்கோடு ஊராட்சி தலைவர் கெப்சிபாய், ஊராட்சி செயலர்கள் ராஜன், மிஷா ஜோஸ் மற்றும் அரசு துறை அதிகாரிகள், திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட், திமுக மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெனின், ஜோண்ஸ், சிவன், விபின், ஏற்றக்கோடு ஊராட்சி துணை தலைவர் அகஸ்டின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி