குன்றம் பங்குனி விழாவில்தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்

திருப்பரங்குன்றம், ஏப்.5: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டத்திற்காக தேரில் அலங்கார வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கொடியேற்றம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது/ இந்த திருவிழா வருகின்ற ஏப்.10ம் தேதி நிறைவடைகிறது. இதில் முக்கிய விழாக்களான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும், தேரோட்டம் வருகின்ற 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்திற்காக தேரில் அலங்கார வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக பணியாளர்கள் தேரில் அலங்கார வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். திருவிழா நாட்களில் தினமும் காலை. மாலை இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை