குன்னம் அருகே கல்லை கிராமத்தில்

குன்னம், செப்.6: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமத்திலிருந்து குன்னம், வேப்பூர் வழியாக கிரவல் மண் லோடு தினமும் இரவு நேரத்தில் பல்வேறு இடத்திற்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது. இரவு நேரங்களில் அதிவேகமாக செல்வதால் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. நேற்று அதிகாலை அதிவேகமாக சென்ற டாரஸ் டிப்பர் லாரி கல்லை பொன்னேரி குளம் பகுதியில் ஓட்டுனரின் கவனக்குறைவால் டாரஸ் லாரி சாலையின் ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கல்லை பொன்னேரி குளம் சாலை வளைவில் அடிக்கடி மிக கோரமான விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான சுண்ணாம்பு கல் லாரி மற்றும் கிராவல் மண் லாரிகள் இந்த பகுதியில் அதிவேகமாக செல்வதால் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை