குத்தாலம் அருகே கீழே சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் மின் கம்பம்-உடனே சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கருப்பூர் ஊராட்சி கரை கண்டத்தில் கும்பகோணம் முதல் தரங்கம்பாடி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பல மாதங்களாக முழுவதும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து இருப்பதனால் அதில் பழுதான மின் விளக்கைக்கூட மாற்ற முடியாமலும், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மின் கம்பத்தை மின்சார வாரிய அதிகாரிகள் மின்சாரத்தில் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் உடனடியாக சாலையோரம் சாய்ந்து இருக்கும் மின் கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

வெயிலுக்கு விடைகொடுக்க படையெடுத்த சுற்றுலாப்பயணிகள் விடுமுறையில் திணறிய கொடைக்கானல்

பெரியாறு அணை விவகாரத்தில் தொடர் சர்ச்சைப் பேச்சு குமுளியை முற்றுகையிடக் கிளம்பிய தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

திருச்சியில் நில அபகரிப்பு புகாரில் ஐஜேகே நிர்வாகி கைது