குட்கா விற்ற கடைக்கு சீல்

தர்மபுரி, ஜூன் 22: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட மெணசி, பூதநத்தம், விருதுபட்டி, கதிரிபுரம் போன்ற கிராமங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, ஒரு கடையை பூட்டி சீல் வைத்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளின் அருகேயுள்ள 4 கடைகளில் ஆய்வு செய்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அந்த 4 கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹8,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தெரிவித்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை