குட்கா பதுக்கிய ‘பரோட்டா’ கைது

 

ராஜபாளையம், மே 8: ராஜபாளையத்தில் குட்கா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் பகுதியில் மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெயச்சந்திரன் என்ற சேட்டன்(30), ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவை சேர்ந்த ராஜ் மகன் பிரகாஷ் என்ற பரோட்டா(23), பரமசிவம் மகன் இசக்கி முத்து(24) ஆகியோரிடம் இருந்து 375 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு சக்கர வாகனம் மற்றும் ரொக்க பணம் ரூ.19 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’