கடையம் : கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள் நாடானூர் குடியிருப்பு வழியாக தீர்த்தாரப்பபுரத்தில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷருக்கு உயரழுத்த மின்கம்பி கொண்டு செல்லும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை அணைந்தபெருமாள் நாடானூர் கிராம மக்கள் மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு வழியாக உயரழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்வதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் நடக்கிறது. இதனை உடனே நிறுத்தாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர். தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி எஸ்ஐக்கள் முத்துக்கிருஷ்ணன், காமராஜ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குடியிருப்பு வழியாக மின்கம்பிகள் கொண்டு செல்லும் பணியை நிறுத்துவதாக தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்….