குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

 

திருப்பூர், ஜன.26: திருப்பூரில், குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடியேற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளன.

இதுபோல கலைநிகழ்ச்சிகள் மேற்கொள்கிற மாணவ-மாணவிகளின் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்திற்கு தொழிலாளர்களின் வருகை அதிகமாக உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, போலீஸ் பிரேமலதா மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கோகிலவாணன், அஸ்வதி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு