குடிபோதையில் பெண்ணை தாக்கியவருக்கு அடி உதை

மானாமதுரை, ஜன. 14: மானாமதுரை அருகே முத்தரசன் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மனைவி புஷ்பம்(60) இவர் நேற்று வீட்டில் இருந்த போது வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணன்(53) குடிபோதையில் தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து கேட்ட புஷ்பத்தை கிருஷ்ணன் தாக்கியுள்ளார். இதில் லேசான காயமடைந்த புஷ்பா வீட்டில் இருந்த மகன்கள் தங்கராஜ், முருகன் ஆகியோரிடம் கூறியுள்ளார். புஷ்பத்தின் மகன்கள் சேர்ந்து கிருஷ்ணனை அடித்து உதைத்தனர். இதில் கிருஷ்ணனும் காயமடைந்தார். இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணன், தங்கராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்