குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டம்

 

கோவை, மார்ச் 14: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர் (கோவை மண்டலம்) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கோவை பாரதி பார்க் ரோட்டில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கோவை – நீலகிரி மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை வங்கியில் செலுத்த வேண்டும். பராமரிப்பு பணி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு