குஜராத்தி படத்தில் அறிமுகமாகும் நயன்தாரா

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘லயன்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் இரட்டை வேடம் ஏற்றுள்ளார். இன்னொரு ஹீரோயினாக பிரியாமணி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்தியில் அறிமுகமாகும் நயன்தாரா, அடுத்து குஜராத்தி படத்தில் அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சில தமிழ் படங்கள் தயாரித்துள்ள அவர், தற்போது குஜராத்தி மொழியில் உருவாகும் ‘சுப யாத்ரா’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதை தேசிய விருது பெற்ற மணீஷ் சைனி இயக்குகிறார். மல்ஹர் தக்கார், மோனல் கஜ்ஜார் நடிக்கின்றனர். இப்படம், தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை