கீழ்வேளூர்,ஜூன்7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த மேலஈசனூர் புனித செபஸ்தியார் ஆலய 50ம் ஆண்டு (பொன்விழா) மின் அலங்கார தேர்பவனி திருவிழா நடைபெற்றது.
மேலஈசனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கோயில் பங்கு தந்தை டேவிட்செல்வகுமார் புனிதம் செய்து தேர் பவனியை தொடஙகி வைத்தார். செபஸ்தியர், மாதா, சம்மனசு ஆகிய செருபங்கள் தனித்தனியே தேர் வீதிஉலா காட்சி நடைபெற்றது. தேர் திருவிழாவில் ஜான்பிரிட்டோ, டோமினிக்சாவியோ உள்ளிட்ட ஏராளமானோர் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். 50ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கோயில் மின் அலங்காரம் செய்யப்பட்டது.