கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ திறந்துவைத்தார்

பாவூர்சத்திரம், அக்.6: கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். கீழப்பாவூர் மைதானம் பகுதியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பேசினார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் விநாயகச்செல்வி, மேற்பார்வையாளர்தேன்மொழி, ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் கணபதி, மாநில அமைப்புச்செயலாளர் ராதா, பேரூர் செயலாளர் ஜெயடினா முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் இலக்குமண தங்கம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை