கிருஷ்ணராயபுரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம். ஜூன் 27: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை வைத்திய நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (58), இவர் தனது ஆட்டோவில் கடந்த 23ம் தேதி லாலாபேட்டையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் செல்லும்போது எதிரே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த சிவா (24) என்பவர் பைக் ஓட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (34) என்பவர் பின்னால் அமர்ந்து கொண்டு வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

அதில் படுகாயம் அடைந்த முருகன், வெள்ளைச்சாமி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்