திருத்தணி: பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருத்தணி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம் பற்றி மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய எல்லம்பள்ளி முதல் கொத்தூர் மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோதண்டராமபுரம் – முத்துக்கொண்டாபுரம், கே.ஜி.கண்டிகை வளர்புரம், பூண்டி ஒன்றியத்தில் உள்ள பி.ஆர்.ஆர்.ரோடு முதல் அரும்பாக்கம் வரை டி.எஸ்.சாலை முதல் புன்னம்பாக்கம் வரை, டி.எஸ்.ரோடு முதல் மெய்யூர் வரை என 8 சாலைகள் சுமார் 24 கி.மீ. வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சாலைகள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என டெல்லியில் இருந்து தேசிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சர்மா, சத்யபிரகாஷ் ஆகியோர் நேரில் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் சாலைகள் தரமானதாக உள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் ராஜவேலு, உதவி இயக்குனர் சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டினர். அப்போது ஒன்றிய பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்….