கிராமத்திற்குள் யானை நுழைவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி உறுதி

தீர்த்தஹள்ளி தொகுதி எல்எல்ஏ அரக ஞானேந்திரா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி பதில் அளித்து கூறியதாவது: “தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பே பகுதியில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதையொட்டி 5.722 கிமீ. நீளம் யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. அத்துடன் யானை நுழைவதை தடுக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல் குரங்குகளின் தாக்குதல்களை தடுப்பதற்காக ஷிவமொக்கா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் குரங்குகள் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 2020-21ல் 25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குரங்குகளை பிடிப்பதற்கான கூண்டுகள், சிகிச்சை அளிப்பதற்கு 12 கால்நடை மருத்துவ அதிகாரிகள் நியமனம், குரங்குகளுக்கு இனவிருத்தி தடை ஆபரேசன் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். வன விலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. தீர்த்தஹள்ளி மட்டும் இன்றி மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வன விலங்குகள் மூலமாக ஏற்படும் சேதத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்….

Related posts

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்