கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியலாளர் கோகுலகண்ணன், கனிமவள தனித்துணை தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி தரப்பு திருமலை நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2 கருப்பு கிரானைட் கற்களுடன் சென்ற லாரியை சோதனை செய்ததில், அனுமதி சீட்டு இன்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை