கிரானைட், கருங்கற்கள் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள சிறப்பு தாசில்தார் கோகுல கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அருகே கொண்டேபள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பி வேலி அமைக்க கருங்கல் ஏற்றி வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, தாலுகா போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதே போல், பர்கூர் அருகே கொண்டநாயக்கன் பஸ் நிறுத்தம் பகுதியில், கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து ₹77ஆயிரம் மதிப்பிலான கிரானைட் கற்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி