கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கெங்கவல்லி, ஜூலை 31: கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சி மேற்குகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். இவரது தோட்டத்தில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர்(பொ) அசோகன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் கயிறு மூலம் இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளிமானை, கெங்கவல்லி வனசரகர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மானை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி