கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாப சாவு

திருவில்லிபுத்தூர், ஜூன் 14: திருவில்லிபுத்தூர் அருகே மாங்காய் பறிக்க சென்ற போது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அயன் கரிசல்குளத்தை சேர்ந்த சிறுவன் சூர்யா(6). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மாங்காய் பறிக்க சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நத்தம்பட்டி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்

சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதல்கட்ட பேச்சுவார்த்தை