காஷ்மீர் வாகன விபத்தில் தமிழக சிஆர்பிஎப் வீரர் பரிதாப சாவு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர், காஷ்மீரில்  நேற்று நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மணிபாரதி (38). இவர், காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் (துணை ராணுவ படை) வீரராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று அதிகாலை 11 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ராணுவ லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் சென்ற லாரி துணை ராணுவ படையினர் சென்ற லாரி மீது வேகமாக மோதியதில், 11 வீரர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்த மணிபாரதி சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். அவருக்கு பாரதி (35) என்ற மனைவியும் பரணி (11) என்ற மகன் தர்ஷினி (9) என்ற மகள் அத்திமாஞ்சேரிபேட்டையில் வசித்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டருந்த சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்த சம்பவம் அத்திமாஞ்சேரிபேட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை