காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சாலையில் ஓடி வீணாகும் குடிநீர்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெள்ளம்போல சாலையில் கலந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், பொன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை ராயனூர் பொன்நகர் பகுதியில் இருந்து கோடங்கிப்பட்டி செல்லும் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. போதிய மழையின்மை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில், அதிகளவு தண்ணீர் குழாய் உடைப்பு காரணமாக வெளியேறிச் சென்றதை அனைவரும் விரக்தியுடன் பார்த்துச்சென்றனர். ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் குடிநீர் வீணாவதாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்