சாயல்குடி,ஜூலை 3: கடலாடி காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நேற்று நடந்தது. முதுகுளத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க பெட்டிஷன் மேளா நடத்துவதற்கு ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று கடலாடி காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நடந்தது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி சின்னகண்ணு தலைமை வகித்தார். எஸ்.ஐ ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ கந்தசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடலாடி பகுதியை சேர்ந்த சிலர் புகார் மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.