சென்னை: காவல்துறை மரியாதையுடன் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பால் கடந்த ஒருவாரமாக கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் கொளத்தூர் நேர்மை நகர் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது….