காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், மாநகராட்சி பகுதியை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 3 வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு கொரோனா விழிப்புணர்வு வாசங்கள் ஒலிக்க விட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு வாகனங்களை ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி