காளையார் கோவிலில் இன்று மின்தடை

 

சிவகங்கை, மே 4: காளையார்கோவிலில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் புலியடிதம்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் திருநகர், வசந்தம் நகர், நடுவாழி, அருள் நகர், மாந்தாளி, தென்றல் நகர், ஒத்த வீடு(கிழக்கு), சூசையப்பர்பட்டணம், ராஜா நகர், நற்புதம், குருந்தனி, ஆண்டிச்சியூரணி(தெற்கு), விஐபி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9மணியிலிருந்து பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசு ஊழியருக்கு தொந்தரவு ஓய்வு எஸ்.ஐ மீது வழக்கு பதிவு

மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்