தேவகோட்டை, ஜூன் 2: தேவகோட்டை பஸ்நிலையம் முன்பாக கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த கால்வாய்க்குள் காளை மாடு ஒன்று விழுந்தது. தகவலறிந்து வந்த தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் இறங்கி காளையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த காளை சிறிதுநேரம் கழித்து சென்றது.