கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

திருவாடானை, ஜூலை 7: திருச்சியை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன். இவர் நேற்று திருச்சியில் இருந்து காரில், இவரது நண்பர்களுடன் காடரந்தகுடியில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றார். விழா முடிந்து திரும்பிய போது திருவாடானை சிகே.மங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே கார் டயர் வெடித்ததில் கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டி வந்த பிரவின் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். கார் நொறுங்கிய நிலையில் உயிர் சேதம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர்.  இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை