கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரி மேல்ஆஞ்சநேயர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (41). டான்ஸ் மாஸ்டரான இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் விஜயகுமார் (40), ஆட்டோ டிரைவர். இந்நிலையில், ராஜேந்திரகுமார் தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி செல்வது வழக்கம். அதே இடத்தில் விஜயகுமார், தனது ஆட்டோவை அடிக்கடி நிறுத்தி செல்வார். இதனால் இவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கார் நிறுத்திய இடத்தில் விஜயகுமார் ஆட்டோவை நிறுத்தியதால், இதுபற்றி ராஜேந்திரகுமார் கேட்ட போது, அவர்களுக்கிடைேய தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, ராஜேந்திரகுமாரின் கார் கண்ணாடியை, விஜயகுமார் உடைத்து நொறுக்கினார். இது குறித்து ராஜேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை