கார்மெல் குழந்தையேசு திருத்தலத்தில் பவுர்ணமி ஜெபவழிபாடு

தஞ்சாவூர், ஜுன் 23: தஞ்சை கார்மெல் குழந்தை இயேசு திருத்தில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு முழு செபவழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வழிபாடாக குழந்தைபேறு வேண்டுவோருக்காகவும், நோயாளிகளுக்காகவும் விசேஷ செபவழிபாடு செய்யப்படுகிறது. கார;மெல் அற்புத குழந்தையேசு திருத்தலத்தில் இந்த மாத பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு நடைபெற்றது.

நரசிங்கனூர் அருட்தந்தை ஜேசுதாஸ் ஆசை என்ற மைய சிந்தனையில் சிறப்பு பொளர்ணமி திருப்பலி நிறைவேற்றினார். திருத்தல அதிபர் சுரேஷ்குமார், உதவி பங்குதந்தை பிரபு ஆகியோர் தலைமையில் பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் 1000 கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு ஏற்பாடுகளை கார்மெல் அற்புத குழந்தையேசு திருத்தல அருட்தந்தை சுரேஷ்குமார், உதவி அருட்தந்தை பிரபு, பௌர்ணமி செபக்குழுவினர், பக்தர;கள் செய்திருந்தனர்,

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை