கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு சென்னை போர் நினைவு சின்னத்தில் தட்சண பாரத தலைமை ராணுவ அதிகாரி ஜெனரல் அருண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 23-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.