காமராஜ் பொறியியல் கல்லூரியில் யோகா தின போட்டிகள்

விருதுநகர், ஜூன் 23: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டிகள் நடைபெற்றது. மாணவர் பிரிவில் 3ம் ஆண்டு மாணவர் வாசன், மாணவிகள் பிரிவில் முதலாம் ஆண்டு மாணவி நித்யா முதல்பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சிவனேஷ் குமார் பதக்கங்கள், பரிசுகளை வழங்கினார். கல்லூரி செயலாளர் தர்மராஜன், பொருளாளர் முருகன், முதல்வர் செந்தில் பாராட்டினர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி