காந்திஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்

தஞ்சாவூர், அக்.1: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் நாளை (02/10/2024) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி