காட்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர்: போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

வேலூர், ஆக. 8: காட்பாடி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். விருதம்பட்டை சேர்ந்தவர் மகாராஜா(28). இருவரும் உறவினர்கள் என்பதால் சிறுவயது முதலே பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் மகாராஜா காதலிப்பதாக மைனர் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் ெதாடர்ந்து வழக்கம்போல் பழகியுள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை மகாராஜா திருமணம் செய்துள்ளார். தற்போது மைனர் பெண் 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மகாராஜா மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி