காங்கிரஸ் வேட்பாளர் திரவியத்தை ஆதரித்து கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிப்பு

சென்னை: திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.சாமுவேல் திரவியத்தை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி திருவொற்றியூர் மதுரா நகரில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி பெட்ரோல் விலையை குறைத்தார். மாணவர்களை பாதிக்கும்  நீட் தேர்வு, சிறுபான்மையின மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், பாஜ அரசுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடரும்.6வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சாமுவேல்  திரவியம் நேர்மை, நாணயம் மிக்க பொதுநலத் தொண்டர். அவருடைய வாழ்நாள் முழுவதும் தேசிய இயக்கத்திற்காக பாடுபட்டவர். அதனால் அவரை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, கே.பி.சங்கர் எம்எல்ஏ, காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, ஓபிசி பிரிவு தலைவர் நவீன், திமுக வட்டச் செயலாளர் கி.கண்ணன் காங்கிரஸ் பகுதி செயலாளர் அரவிந்த் ஆறுமுகம், திமுக மாணவரணி மோகனசுந்தரம், வட்ட பிரதிநிதி மகேந்திரன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை பணி பாராட்டுக்குரியது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

சொல்லிட்டாங்க…