காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

 

சிவகங்கை, அக்.8:சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் கொள்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விளக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து அரண்மனை வாசல் வரை பேரணி நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய்காந்தி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜன், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவி ஸ்ரீவித்யாகணபதி, நகர் தலைவர் விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரியங்கா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் சையது இப்ராகிம் மற்றும் எராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்