காங்கிரசார் கொண்டாட்டம்

ஊத்தங்கரை, ஜூன் 7: நாடாமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றார். இதையடுத்து ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் தலைமையில், நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர், காமராஜர், ராஜிவ் காந்தி, அண்ணா, இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், வட்டார தலைவர் ரவி, திருமால், நகர தலைவர் விஜயகுமார், பூக்கடை மகி, திமுக நகர தலைவர் தணிகை குமரன், விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன், காங்கிரஸ் மாநில துணை செயலாளர் ஆறுமுகம், இளையராஜா, மகேந்திரன், தமிழ்செல்வன், எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை