காக்களூர் ஊராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட பாக்கியம் நியூ டவுன் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பாக்கியம் நியூ டவுன் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்