காரைக்குடி, ஜூலை 23: காரைக்குடி அருகே சாக்கோட்டையில் மதிமுக சார்பில் கவர்னரை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது. மதிமுக ஒன்றிய செயலாளர் லோகநாதன் வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை முதல் கையெழுத்து போட்டு துவக்கிவைத்தார். மதிமுக மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமைவகித்தார்.
புதுவயல் திமுக பேரூர் கழக செயலாளர் பகுருதீன்அலிபாய், திமுக இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் மணிகண்டன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கருப்பையா, மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி அப்துல்ரகுமான், விசிக மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், விசிக பாண்டி மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.