கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்பு

 

தேவகோட்டை, ஜூன் 1: தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி பூமயில் (65). இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமயிலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு