ஈரோடு,மே9: ஈரோடு மாவட்டம் குறிச்சி குச்சிகல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கள்ளினை விற்பனைக்கு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன்(53) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 லிட்டர் பனை மர கள்ளினை பறிமுதல் செய்து அழித்தனர்.