கள்ள காதலியை கழுத்தை நெரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் எழில் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(36). இவரது கணவர் கார்த்திக். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2015ம் ஆண்டு கணவரிடமிருந்து பிரிந்து மகள் லோகஸ்ரீயுடன் தனியாக புவனேஸ்வரி வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த குமார்(38) என்பவருடன் புவனேஸ்வரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நார்த்தாமலையில் உள்ள குமாரின் கோழிப்பண்ணையில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். 2019ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி கோழிப்பண்ணையில் இருவரும் சந்தித்தபோது குமாரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு புவனேஸ்வரி வற்புறுத்தினார். இதற்கு குமார் சம்மதிக்காததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்து புவனேஸ்வரி கழுத்தை சேலையால் இறுக்கி குமார் கொலை செய்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று, குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கினார். மேலும் சிறையில் இருக்கும்போது குமாருக்கு பணி வழங்கி அதிலிருந்து வரும் வருவாயில் 20 சதவீதத்தை இறந்த பெண்ணின் மகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு