கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு கடன்தொல்லையால் தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை-காரில் சடலமாக கிடந்தார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அருகில் உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் ஜெயராமன்(55). இவருக்கு சொந்தமான மாடன் ரைஸ்மில் கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலை பகுதியில் உள்ளது. தற்போது ஜெயராமன் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரைஸ்மில்லுக்காக வங்கியில் கடன் பெற்றுதிரும்ப கட்டமுடியாத நிலையில் இருந்து வந்ததாகவும், வெளியாட்களிடமும் கடன் பெற்றதை திரும்ப கட்டமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் ஜெயராமன் சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி அருகே புறவழிசாலை பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி எதிரே ஜெயராமன் அவரது காரில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் இருந்து மூன்று மதுபான பாட்டில்களை  கைப்பற்றினர். எனவே மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து ஜெயராமன் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஜெயராமனின் மனைவி கலைசெல்வி கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி  போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் தொல்லையால் ஜெயராமன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் தொழில்அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

சாணார்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: கயிறு கட்டி கடக்கும் கிராம மக்கள், சிறுவர்கள்