கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்து!: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணியான ஜெயலட்சுமி என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றிருந்தனர். ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
கர்ப்பிணியான ஜெயலட்சுமி, சிகிச்சைக்காக வேறு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் டிரைவர் கலியமூர்த்தி, செவிலியர் மீனா இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், மூவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் விபத்தால் கர்ப்பிணி பெண் உட்பட 3 உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை