களரி உற்சவ திருவிழா

 

மானாமதுரை, ஜூலை 13: மானாமதுரை அருகே வடக்கு சந்தனூர் கண்மாயில் அமைந்துள்ள அழகிய திருவேட்டை அய்யனார், சோணையா சுவாமி, கருப்பண்ண சுவாமிகளுக்கு களரி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலுக்கான வண்ணான்குளம் கிராம பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒன்று கூடி நடத்திய விழா என்பதால் ஏராளமான கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.

சிறப்பு பூஜை நடத்தி மொட்டை எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகிய திருவேட்டை அய்யனார் சுவாமி அருள் பெற்று சென்றனர். தொடர்ந்து சோணையா சுவாமி, கருப்பணசுவாமி ஆலயத்திலும் கிடா வெட்டி அன்னதான பூசைகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு