கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கல்வி உதவி: இன்ஸ்பெக்டர், ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினர்

திருக்கழுக்குன்றம்: கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தவித்து வந்த ஏழை மாணவிக்கு, இன்ஸ்பெக்டர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர், ரூ.20 ஆயிரம் கொடுத்து உதவி செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மினி வேன் டிரைவர். இவரது மகள் யுவராணி (21). மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் இயங்கும் கற்பக வினாயகா கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 4ம் ஆண்டு படிக்கிறார். இந்நிலையில், யுவராணி கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதையறிந்த, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கொத்திமங்லம் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் ஆகியோர் சார்பில், கனகம்மாளின் மகன் பிச்சைமுத்து  ஆகியோர் இணைந்து, கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவி யுவராணிக்கு கல்லூரி கட்டண உதவித் தொகையாக  ரூ.20 ஆயிரத்தை வழங்கினர்….

Related posts

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

திருச்சியில் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை : மேளம் அடித்து சங்கு நாதங்கள் முழக்கம்

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு