கல்வி உதவித்தொகை; முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

சென்னை:   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ம்தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். நிறுத்தப்பட்ட மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை மீண்டும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரினார்.மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்து விட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய கிறிஸ்மஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கினார். அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்