கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் கல்லூரி விடுதி மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு கல்லூரி மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை கல்லூரி மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவு தரம் குறைவாக உள்ளது என்றும், அடிப்படை வசதிகள் முறையாக பராமரிப்பு இல்லை என்றும் விடுதி காப்பாளரையும், சமையலரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தவசெல்வம் மற்றும் அதிகாாிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை